
janani
Jun 10, 2026
பல்சுவை
'இயக்குநர் இமயம்' பாரதிராஜா காலமானார்!

தமிழ் திரைப்பட உலகின் தலைசிறந்த இயக்குநர்களில் ஒருவராகப் போற்றப்பட்ட ‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜா இன்று தனது 84ஆவது வயதில் காலமானார். உடல்நலக் குறைவு காரணமாக கடந்த சில மாதங்களாக சிகிச்சை பெற்று வந்த அவர், சென்னை இல்லத்தில் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
1977ஆம் ஆண்டு வெளியான 16 வயதினிலே திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் புதிய புரட்சியை ஏற்படுத்திய பாரதிராஜா, கிராமிய வாழ்க்கை, காதல், மனித உறவுகள் மற்றும் மண்ணின் மணம் கலந்த கதைகளை வெள்ளித்திரையில் உயிரோட்டமாக பதிவு செய்தார்.
கிழக்கே போகும் ரயில், புதிய வார்ப்புகள், அலைகள் ஓய்வதில்லை, முதல் மரியாதை உள்ளிட்ட பல காலத்தால் அழியாத படைப்புகளை வழங்கிய அவர், தமிழ் சினிமாவை ஸ்டூடியோ எல்லைகளில் இருந்து கிராமங்களின் இயற்கைச் சூழலுக்குக் கொண்டு சென்ற முன்னோடியாகக் கருதப்படுகிறார்.
இயக்குநராக மட்டுமல்லாமல் நடிகராகவும் தனித்துவமான முத்திரையை பதித்த பாரதிராஜா, தனது படைப்பாற்றலுக்காக தேசிய விருதுகள் உள்ளிட்ட பல உயரிய விருதுகளை பெற்றுள்ளார். இந்திய அரசின் பத்மஸ்ரீ விருதும் அவருக்கு வழங்கப்பட்டது.
கடந்த ஆண்டு அவரது மகனும் நடிகர்-இயக்குநருமான மனோஜ் பாரதிராஜா உயிரிழந்த சம்பவம் அவரை மனரீதியாக பெரிதும் பாதித்திருந்ததாக நெருங்கிய வட்டாரங்கள் தெரிவித்திருந்தன.
பாரதிராஜாவின் மறைவு தமிழ் திரைப்பட உலகிற்கும், உலகம் முழுவதும் உள்ள தமிழ் ரசிகர்களுக்கும் ஈடுசெய்ய முடியாத இழப்பாகக் கருதப்படுகிறது. அவரது மறைவுக்கு திரைப்பட பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் மற்றும் ரசிகர்கள் பலரும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர்.
Join the newsletter
Be the first to read our articles.
Follow Social Media
Follow us and don’t miss any updates!
Related News
View All





