2026 August 17, Monday 🌧️ கொழும்பு 25° ⛅ யாழ்ப்பாணம் 28° ⛅ கண்டி 21° ⛅ மட்டக்களப்பு 27°
LIVE
கரைதுறைப்பற்று பிரதேச சபை உப தவிசாளர் உட்பட ஐவர் கைது!நிதி முறைகேடுகள் தொடர்பான தகவல்களை வழங்குமாறு பயனாளிகளுக்கு கோரிக்கை!யாழ்ப்பாண மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதியால் புதிய வீடு கையளிப்பு!நாடு முழுவதும் 96 பகுதிகள் அதிஅபாய டெங்கு வலயங்களாக அடையாளம்!அவுஸ்திரேலியாவை 9 விக்கெட்டுகளால் வீழ்த்தி பங்களாதேஷ் வரலாற்று வெற்றி!நாட்டின் பெரிய வெங்காயத் தேவையில் 50% உள்நாட்டில் உற்பத்தி செய்ய திட்டம்!கடுவெல வழியாக பயணிப்போருக்கு பொலிஸாரின் முக்கிய அறிவிப்பு!28 ஆண்டுகால சாதனையை முறியடித்த ஜேர்மனியின் ஜூலியன் வெபர்!

புதிய கல்விச் சீர்திருத்தங்களுக்கு எதிராக கறுப்புப் பட்டி அணிந்து போராட்டம்

உள்ளூர்January 20, 2026 · 7 months முன்1
புதிய கல்விச் சீர்திருத்தங்களுக்கு எதிராக கறுப்புப் பட்டி அணிந்து போராட்டம்

புதிய கல்விச் சீர்திருத்தங்களுக்கு எதிராக ஹோமாகம பிரதேச சபையின் எதிர்க்கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் உறுப்பினர்கள் சிலர் இன்று கறுப்புப் பட்டி அணிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். 

ஹோமாகம வாராந்த சந்தைக்கு அருகில் ஒன்று கூடிய அந்தக் குழுவினர், அவ்விடத்திலிருந்து கறுப்புப் பட்டி அணிந்து எதிர்ப்புப் பதாகைகளை ஏந்தியவாறு ஹோமாகம பிரதேச சபை வரை ஊர்வலமாக வந்ததோடு, சபை அமர்வு மண்டபத்திற்குள்ளும் சென்று அங்கும் எதிர்ப்பு கோஷங்களை எழுப்பி தமது எதிர்ப்பை வெளியிட்டனர். 

இந்த போராட்டத்தில் ஐக்கிய மக்கள் சக்தி, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன, சர்வஜன அதிகாரம், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் உறுப்பினர்கள் இணைந்திருந்தனர்.