2026 August 16, Sunday 🌧️ கொழும்பு 26° ⛅ யாழ்ப்பாணம் 28° ⛅ கண்டி 22° ⛅ மட்டக்களப்பு 27°
LIVE
எல்ல சுற்றுலாத்துறைக்கு ரூ.1,000 மில்லியனுக்கும் அதிகமான அபிவிருத்தித் திட்டங்கள்!அம்பாறை மீனவர்களின் பிரச்சினைகளுக்கு விரைவான தீர்வு!ஜனாதிபதியுடனான கலந்துரையாடலின் முழு வீடியோவை கோரும் சட்டத்தரணிகள் சங்கம்!சிறைச்சாலை அதிகாரிகளுக்கு ஆபத்தை ஏற்படுத்த திட்டமா? அதிர்ச்சித் தகவல்!திருகோணமலையில் திறமையான மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை!இந்தியாவுக்குச் சொந்தமானதா? இரணைவில கடற்கரையில் மர்ம படகு!Google Maps-ல் புதிய AI வழிகாட்டி – பயணம் இனி இன்னும் எளிது!தினசரி உடற்பயிற்சி – ஆரோக்கியமான நீண்ட ஆயுளுக்கு முதல் படி!

முன்னாள் சபாநாயகர் அசோக ரன்வலவின் கலாநிதி பட்டம் தொடர்பில் பிமல் கேள்வி

உள்ளூர்January 20, 2026 · 7 months முன்1
முன்னாள் சபாநாயகர் அசோக ரன்வலவின் கலாநிதி பட்டம் தொடர்பில் பிமல் கேள்வி

முன்னாள் சபாநாயகர் அசோக ரன்வல பெற்றுள்ளதாகக் கூறப்படும் கலாநிதிப் பட்டம் குறித்து போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க சந்தேகம் வெளியிட்டுள்ளார்.

ரன்வலவிடம் அதற்குரிய சான்றிதழ் இருப்பதாக தான் நம்பவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அரசியல் கலந்துரையாடல் ஒன்றில் கலந்துகொண்டு பேசிய ரத்நாயக்க, 2024 நவம்பர் மாதம் அந்தச் சான்றிதழ் சமர்ப்பிக்கப்படும் என உறுதியளிக்கப்பட்ட போதிலும், போதுமான கால அவகாசம் கடந்தும் அது காட்டப்படவில்லை என்பதை வலியுறுத்தினார்.

தனது உறுதிமொழியை நிறைவேற்றத் தவறியமையே ரன்வல சபாநாயகர் பதவியில் இருந்து நீக்கப்படுவதற்குக் காரணம் என அவர் குறிப்பிட்டார்.

சரிபார்க்கப்பட்ட தகைமைகள் இன்றி நாட்டின் ஒரு முக்கிய பதவியை வகித்தமைக்காக அவருக்கு வழங்கப்பட்ட ‘அரசியல் மற்றும் சமூகத் தண்டனை” இதுவென அவர் விவரித்தார்.

ரன்வலவின் கலாநிதிப் பட்டத்திற்கு முறையான சான்றுகள் எதுவும் இல்லை என்பதை ரத்நாயக்க மீண்டும் உறுதிப்படுத்தினார்.