2026 August 17, Monday 🌧️ கொழும்பு 27° ⛅ யாழ்ப்பாணம் 27° ⛅ கண்டி 22° ☀️ மட்டக்களப்பு 27°
LIVE
கரைதுறைப்பற்று பிரதேச சபை உப தவிசாளர் உட்பட ஐவர் கைது!நிதி முறைகேடுகள் தொடர்பான தகவல்களை வழங்குமாறு பயனாளிகளுக்கு கோரிக்கை!யாழ்ப்பாண மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதியால் புதிய வீடு கையளிப்பு!நாடு முழுவதும் 96 பகுதிகள் அதிஅபாய டெங்கு வலயங்களாக அடையாளம்!அவுஸ்திரேலியாவை 9 விக்கெட்டுகளால் வீழ்த்தி பங்களாதேஷ் வரலாற்று வெற்றி!நாட்டின் பெரிய வெங்காயத் தேவையில் 50% உள்நாட்டில் உற்பத்தி செய்ய திட்டம்!கடுவெல வழியாக பயணிப்போருக்கு பொலிஸாரின் முக்கிய அறிவிப்பு!28 ஆண்டுகால சாதனையை முறியடித்த ஜேர்மனியின் ஜூலியன் வெபர்!

ஐக்கிய தோட்டத் தொழிலாளர் சங்க பொதுச் செயலாளர் காலமானார்.

உள்ளூர்December 28, 2025 · 8 months முன்3
ஐக்கிய தோட்டத் தொழிலாளர் சங்க பொதுச் செயலாளர்  காலமானார்.

மலையகத்தின் மூத்த இடதுசாரி தொழிற்சங்கவாதி மற்றும் ஐக்கிய தோட்டத் தொழிலாளர் சங்க பொதுச் செயலாளர் ஆ. முத்துலிங்கம், நியூமோனியா காய்ச்சலில் பாதிக்கப்பட்டு பதுளை போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பலனின்றி தனது 79ஆம் வயதில் சனிக்கிழமை (27) இறந்தார் என்று அவரது மகன் அரவிந்த் தெரிவித்துள்ளார்.

அவர் தனது இறுதிக் காலம் வரை தொழிலாளர் நலனுக்காக பணியாற்றியவர்; மலையக மக்களின் சமூக நலனுக்காக பல அமைப்புகளில் ஈடுபட்டு, காணி உரிமை இயக்கத்தில் குரல் கொடுத்தவர். பல கட்டுரைகளை தேசிய பத்திரிகைகளில் எழுதி மக்களின் பிரச்சினைகளை வெளிப்படுத்தியுள்ளார்.

இறுதிக் கிரியா பதுளை பொது மயானத்தில் 29ஆம் திகதி மாலை 3:30 மணிக்கு நடைபெறும். மேலதிக தகவல்களுக்கு அவரது மகன் அரவிந்த் (0787754424) தொடர்புகொள்ளலாம்.