சூடானில் மண்சரிவு – ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு.

மேற்கு சூடானின் தொடரும் சீரற்ற வானிலை காரணமாக ஏற்பட்ட மண்சரிவினால் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 31 ஆம் திகதி ஏற்பட்ட இவ் மண்சரிவின் உத்தியோகப்பூர்வமான அறிவிப்பு இன்று (2) வௌியாகியுள்ளது.
பலர் இந்த மண்சரிவில் சிக்கி காணாமல் போயுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
மீட்பு பணிகளுக்காக ஐக்கிய நாடுகள் சபை மற்றும் பிற சர்வதேச நிறுவனங்களின் உதவி கோரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.





