2026 August 17, Monday ⛅ கொழும்பு 28° ⛅ யாழ்ப்பாணம் 30° 🌧️ கண்டி 28° ☀️ மட்டக்களப்பு 32°
LIVE
ரூ.770 கோடி மதிப்புள்ள அபூர்வ ஓவியங்கள் திருட்டு!நெல் சந்தைப்படுத்தல் சபையின் நெல் கொள்வனவு நடவடிக்கைகள் தொடர்கின்றன!வனஜீவராசிகள் கால்நடை வைத்தியர்களின் தொழிற்சங்க நடவடிக்கை தொடர்கிறது!கால்பந்துக்கு விடை கொடுக்கிறாரா ரொனால்டோ? ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கிய அறிவிப்பு!இந்தியாவின் 462 ஓட்டங்களுக்கு பதிலடி கொடுக்க களமிறங்கும் இலங்கை!14 மாடிக் குடியிருப்பிலிருந்து கீழே விழுந்த சிறுவன் உயிரிழப்பு!7.7 ரிக்டர் நிலநடுக்கத்தைத் தொடர்ந்து புளோரஸில் மீண்டும் சக்திவாய்ந்த அதிர்வு!கரைதுறைப்பற்று பிரதேச சபை உப தவிசாளர் உட்பட ஐவர் கைது!

டீசலின் விலை குறைப்பு : பிரதி அமைச்சர் கருத்து

உள்ளூர்September 2, 2025 · 12 months முன்0
டீசலின் விலை குறைப்பு : பிரதி அமைச்சர் கருத்து

தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஓரு லீற்றர் டீசலின் விலையை 120 ரூபாவினால் குறைத்துள்ளது என பிரதி அமைச்சர் நாமல் கருணாரட்ன தெரிவித்துள்ளார்.

தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் நாட்டை பொறுப்பேற்றுக் கொண்ட போது ஒரு லீற்றர் டீசலின் விலை 363 ரூபாவாக காணப்பட்டது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அண்மையில் எரிபொருள் விலைகள் குறைக்கப்பட்டதனைத் தொடர்ந்து டீசலின் விலை இவ்வாறு லீற்றர் ஒன்றுக்கு 120 ரூபா என்ற அடிப்படையில் குறைவடைந்துள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

பெற்றோல் மற்றும் மண்ணெண்ணை உள்ளிட்ட ஏனைய எரிபொருள் வகைகளின் விலைகளும் இவ்வாறு குறைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

எவ்வாறெனினும் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஆட்சிப் பொறுப்பினை ஏற்றுக்கொள்ள முன்னர் வெள்ளை டீசல் ஒரு லீற்றர் 307 ரூபாவாகவும், சுப்பர் டீசல் ஒரு லீற்றர் 352 ரூபாவாகவும் விற்பனை செய்யப்பட்டது.

இந்த ஆகஸ்ட் மாதம் 31ம் திகதி இறுதியாக மேற்கொள்ளப்பட்ட விலை திருத்தங்களின் போது வெள்ளை டீசல் ஒரு லீற்றர் 283 ரூபாவாகவும், சுப்பர் டீசல் ஒரு லீற்றர் 313 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் அரசாங்கத்தின் முக்கிய பிரதி அமைச்சர் ஓருவர் விலை மாற்றம் தொடர்பில் வெளியிட்ட கருத்து சமூகத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

ஆளும் கட்சியை பிரதிநிதித்துவம் செய்யும் சில முக்கியஸ்தர்கள் அரசாங்கத்தை அசௌகரியப்படுத்தும் வகையில் சில சர்ச்சை கருத்துக்களை வெளியிடும் சந்தர்ப்பங்கள் அதிகரித்துள்ளன.