2026 August 16, Sunday 🌧️ கொழும்பு 28° ⛅ யாழ்ப்பாணம் 30° ⛅ கண்டி 27° ⛅ மட்டக்களப்பு 31°
LIVE
கடுவெல வழியாக பயணிப்போருக்கு பொலிஸாரின் முக்கிய அறிவிப்பு!28 ஆண்டுகால சாதனையை முறியடித்த ஜேர்மனியின் ஜூலியன் வெபர்!நாட்டின் பல பகுதிகளில் இன்று பல தடவைகள் மழைக்கு வாய்ப்பு!எல்ல சுற்றுலாத்துறைக்கு ரூ.1,000 மில்லியனுக்கும் அதிகமான அபிவிருத்தித் திட்டங்கள்!அம்பாறை மீனவர்களின் பிரச்சினைகளுக்கு விரைவான தீர்வு!ஜனாதிபதியுடனான கலந்துரையாடலின் முழு வீடியோவை கோரும் சட்டத்தரணிகள் சங்கம்!சிறைச்சாலை அதிகாரிகளுக்கு ஆபத்தை ஏற்படுத்த திட்டமா? அதிர்ச்சித் தகவல்!திருகோணமலையில் திறமையான மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை!

மத்திய கிழக்கு நாடுகளின் வான்பரப்பு மூடல்- ஶ்ரீ லங்கன் விமான சேவையிலும் தாமதம்

உலகம்February 28, 2026 · 6 months முன்4
மத்திய கிழக்கு நாடுகளின் வான்பரப்பு மூடல்- ஶ்ரீ லங்கன் விமான சேவையிலும் தாமதம்

இஸ்ரேல் மற்றும் ஈரானுக்கு இடையிலான போர் பதற்றம் காரணமாக மத்திய கிழக்கு நாடுகள் தமது வான்பரப்புகளை மூடியமையினால் பிரித்தானியா, ஐரோப்பா மற்றும் பிற வடக்கு நாடுகளுக்கான ஸ்ரீலங்கன் விமான சேவைகள் நிறுவனத்தின் விமானங்கள் சவூதி அரேபிய வான்வெளி வழியாக திருப்பி விடப்படுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக மேலும் தாமதங்கள் ஏற்படக்கூடும் என ஸ்ரீலங்கன் விமான சேவைகள் நிறுவனம் அறிவித்துள்ளது.

ஶ்ரீ லங்கன் விமான சேவைகள் நிறுவனம் விடுத்துள்ள அறிக்கையில்,

இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையிலான மோதல் போக்கு தீவிரமடைந்துள்ளதைத் தொடர்ந்து, மத்திய கிழக்கின் பல நாடுகளின் வான்பரப்பு மூடப்பட்டுள்ளமையால் விமானச் சேவைகளில் தாமதங்கள் ஏற்படக்கூடும்.

பயணிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும், விமானச் சேவைகளைத் தடையின்றி முன்னெடுக்கவும் சில விமானங்கள் சவூதி அரேபிய வான்பரப்பு ஊடாக மாற்று வழிகளில் இயக்கப்படுவதாகவும் அந்நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.