2026 August 16, Sunday ⛅ கொழும்பு 29° ⛅ யாழ்ப்பாணம் 30° ⛅ கண்டி 28° 🌧️ மட்டக்களப்பு 32°
LIVE
கரைதுறைப்பற்று பிரதேச சபை உப தவிசாளர் உட்பட ஐவர் கைது!நிதி முறைகேடுகள் தொடர்பான தகவல்களை வழங்குமாறு பயனாளிகளுக்கு கோரிக்கை!யாழ்ப்பாண மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதியால் புதிய வீடு கையளிப்பு!நாடு முழுவதும் 96 பகுதிகள் அதிஅபாய டெங்கு வலயங்களாக அடையாளம்!அவுஸ்திரேலியாவை 9 விக்கெட்டுகளால் வீழ்த்தி பங்களாதேஷ் வரலாற்று வெற்றி!நாட்டின் பெரிய வெங்காயத் தேவையில் 50% உள்நாட்டில் உற்பத்தி செய்ய திட்டம்!கடுவெல வழியாக பயணிப்போருக்கு பொலிஸாரின் முக்கிய அறிவிப்பு!28 ஆண்டுகால சாதனையை முறியடித்த ஜேர்மனியின் ஜூலியன் வெபர்!

சர்ச்சைக்குரிய கொள்கலன் விடுவிப்பு – தெரிவுக்குழுவில் உபாலி பன்னிலகே

உள்ளூர்February 18, 2026 · 6 months முன்0
சர்ச்சைக்குரிய கொள்கலன் விடுவிப்பு – தெரிவுக்குழுவில் உபாலி பன்னிலகே

முறையான பரிசோதனையின்றி 323 கொள்கலன்கள் விடுவிக்கப்பட்டமை தொடர்பில் விசாரணை செய்வதற்கான பாராளுமன்ற தெரிவுக்குழுவின் உறுப்பினராக அமைச்சர் கலாநிதி உபாலி பன்னிலகே நியமிக்கப்பட்டுள்ளார்.

நிலையியற் கட்டளை 106இன் விதிகளுக்கு அமைவாக இந்த நியமனம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சபாநாயகர் இன்று (18) பாராளுமன்றுக்கு அறிவித்தார்.

கொழும்பு துறைமுகத்திலிருந்து 323 கொள்கலன்கள் கட்டாய பௌதீகப் பரிசோதனைக்கு உட்படுத்தப்படாமல் விடுவிக்கப்பட்டமை குறித்து ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்கவும், அது தொடர்பான முன்மொழிவுகள் மற்றும் பரிந்துரைகளை முன்வைக்கவும் நியமிக்கப்பட்ட பாராளுமன்ற விசேட குழுவின் உறுப்பினர் பதவியிலிருந்து பாராளுமன்ற உறுப்பினர் அநுர கருணாதிலக விலகியதையடுத்து வெற்றிடம் ஏற்பட்டிருந்தது.

குறித்த வெற்றிடத்திற்கு, கிராமிய அபிவிருத்தி, சமூக பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சர் உபாலி பன்னிலகே இவ்வாறு நியமிக்கப்பட்டுள்ளார்.

நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தலைமையில் இந்த குழு செயற்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.