2026 August 17, Monday 🌧️ கொழும்பு 25° ⛅ யாழ்ப்பாணம் 28° ⛅ கண்டி 22° ⛅ மட்டக்களப்பு 28°
LIVE
கரைதுறைப்பற்று பிரதேச சபை உப தவிசாளர் உட்பட ஐவர் கைது!நிதி முறைகேடுகள் தொடர்பான தகவல்களை வழங்குமாறு பயனாளிகளுக்கு கோரிக்கை!யாழ்ப்பாண மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதியால் புதிய வீடு கையளிப்பு!நாடு முழுவதும் 96 பகுதிகள் அதிஅபாய டெங்கு வலயங்களாக அடையாளம்!அவுஸ்திரேலியாவை 9 விக்கெட்டுகளால் வீழ்த்தி பங்களாதேஷ் வரலாற்று வெற்றி!நாட்டின் பெரிய வெங்காயத் தேவையில் 50% உள்நாட்டில் உற்பத்தி செய்ய திட்டம்!கடுவெல வழியாக பயணிப்போருக்கு பொலிஸாரின் முக்கிய அறிவிப்பு!28 ஆண்டுகால சாதனையை முறியடித்த ஜேர்மனியின் ஜூலியன் வெபர்!

ஏப்ரலுக்குள் பேராதனை பாலத்தின் ஊடாக ரயில் போக்குவரத்து ஆரம்பம்

உள்ளூர்February 18, 2026 · 6 months முன்2
ஏப்ரலுக்குள் பேராதனை பாலத்தின் ஊடாக ரயில் போக்குவரத்து ஆரம்பம்

டித்வா புயலினால் சேதமடைந்துள்ள பேராதனைப் பாலத்தின் ஊடாக ரயில் போக்குவரத்தை எதிர்வரும் ஏப்ரல் மாதம் 14ஆம் திகதிக்கு முன்னர் ஆரம்பிக்கத் திட்டமிட்டுள்ளதாக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் இன்று (18) இடம்பெற்ற அமர்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார்.

குறுகிய இரண்டரை மாதக் காலப்பகுதிக்குள் 1,200 கிலோமீற்றர் நீளமான ரயில் பாதை சீரமைக்கப்பட்டுள்ளது. இதற்காக முப்படையினர் பாரிய ஒத்துழைப்பை வழங்கியுள்ளனர். அவர்களின் ஒத்துழைப்பு கிடைத்திருக்காவிட்டால் நாம் தற்போது இந்த இலக்கை எட்டியிருக்க முடியாது.

அத்துடன், டித்வா புயல் தாக்கத்தினால் ஏற்பட்ட அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட பாலங்கள் மற்றும் வீதிகளில் 99 சதவீதமானவை தற்போது போக்குவரத்தை முன்னெடுக்கக்கூடிய நிலையை எட்டியுள்ளன. இதற்கு உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பாதுகாப்புப் பிரிவினரின் ஒத்துழைப்பே பிரதான காரணமாகும்.

பேராதனைப் பாலத்தின் புனரமைப்புப் பணிகள் பேராதனைப் பல்கலைக்கழகப் பொறியியல் பீடம் மற்றும் பல தரப்பினரின் ஒத்துழைப்புடன் முன்னெடுக்கப்படுகின்றன. எதிர்வரும் ஏப்ரல் 14 ஆம் திகதிக்கு முன்னர் அந்தப் பாலத்தின் ஊடாக ரயில் போக்குவரத்தை ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.