2026 August 15, Saturday ⛅ கொழும்பு 29° ⛅ யாழ்ப்பாணம் 30° 🌧️ கண்டி 27° ⛅ மட்டக்களப்பு 33°
LIVE
இந்தியாவின் 80ஆவது சுதந்திர தினம் இன்று கோலாகல கொண்டாட்டம்ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்கள் தொடர்பில் ஷிரான் பாசிக்கிடம் விசாரணை!இந்தோனேசியாவை உலுக்கிய நிலநடுக்கம்அடுத்தடுத்து 3 அதிர்வுகள்!பல பகுதிகளில் இன்று மழை,வளிமண்டலவியல்திணைக்கம் அறிவிப்பு!இலங்கையின் பொருளாதார வளர்ச்சி சீராக இருக்கும் – மத்திய வங்கி கணிப்பு!22ஆவது அரசியலமைப்புத் திருத்தம் 18ஆம் திகதி பாராளுமன்றத்தில்!டெங்கு வேகமாக பரவுகிறதா? நோயாளர்கள் எண்ணிக்கை 91 ஆயிரத்தை தாண்டியது!அமெரிக்க போர்க்கப்பலில் உணவுப் பற்றாக்குறை – ஆயிரக்கணக்கான வீரர்கள் அவதி?

விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையில் 652 சந்தேகநபர்கள் கைது

உள்ளூர்January 21, 2026 · 7 months முன்1

நேற்று நாடு முழுவதும் பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்ட விசேட நடவடிக்கைகளின் போது 652 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன்போது பொலிஸாரால் மொத்தம் 30,214 நபர்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டனர்.

அவற்றில், குற்றங்களுடன் நேரடியாகத் தொடர்புடைய 24 சந்தேகநபர்கள் அடையாளம் காணப்பட்டு கைது செய்யப்பட்டனர்.

நீதிமன்ற பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த 264 பேரும், திறந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த 161 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

போக்குவரத்து விதி மீறல்களில், மதுபோதையில் வாகனம் செலுத்திய 397 சாரதிகள் கைது செய்யப்பட்டனர்.

கவனக்குறைவாக வாகனம் செலுத்திய குற்றச்சாட்டில் 52 பேர் கைது செய்யப்பட்டனர்.

ஏனைய போக்குவரத்து விதிமீறல்கள் தொடர்பாக 4,777 பேர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.