2026 August 16, Sunday ⛅ கொழும்பு 27° ⛅ யாழ்ப்பாணம் 28° ⛅ கண்டி 22° ⛅ மட்டக்களப்பு 28°
LIVE
கரைதுறைப்பற்று பிரதேச சபை உப தவிசாளர் உட்பட ஐவர் கைது!நிதி முறைகேடுகள் தொடர்பான தகவல்களை வழங்குமாறு பயனாளிகளுக்கு கோரிக்கை!யாழ்ப்பாண மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதியால் புதிய வீடு கையளிப்பு!நாடு முழுவதும் 96 பகுதிகள் அதிஅபாய டெங்கு வலயங்களாக அடையாளம்!அவுஸ்திரேலியாவை 9 விக்கெட்டுகளால் வீழ்த்தி பங்களாதேஷ் வரலாற்று வெற்றி!நாட்டின் பெரிய வெங்காயத் தேவையில் 50% உள்நாட்டில் உற்பத்தி செய்ய திட்டம்!கடுவெல வழியாக பயணிப்போருக்கு பொலிஸாரின் முக்கிய அறிவிப்பு!28 ஆண்டுகால சாதனையை முறியடித்த ஜேர்மனியின் ஜூலியன் வெபர்!

பாகிஸ்தானில் தற்கொலைக் குண்டுத்தாக்குதல்

உலகம்November 24, 2025 · 9 months முன்2
பாகிஸ்தானில் தற்கொலைக் குண்டுத்தாக்குதல்

பாகிஸ்தானின் வடமேற்கு பகுதியிலுள்ள பெஷாவோர் நகரின் துணை இராணுவ படைத் தலைமையகத்தை இலக்கு வைத்து தற்கொலைக் குண்டுத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

ஆயுததாரிகளும் தாக்குதல் நடத்தியுள்ளதாக தெரியவந்துள்ளது. இதில் மூவர் உயிரிழந்துள்ளதுடன் பலர் காயமடைந்துள்ளதாக ஆரம்பகட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறித்த தலைமையக கட்டிடத்தின் நுழைவாயில் பகுதியில் குண்டுத்தாக்குதல் இடம்பெற்றுள்ளது.

இந்நிலையில் பாகிஸ்தான் பாதுகாப்பு படையினர் மீதான இந்த தாக்குதலுக்கு இதுவரை எந்தவொரு பயங்கரவாத அமைப்பும் உரிமை கோரவில்லை.