2026 August 16, Sunday ⛅ கொழும்பு 27° ☀️ யாழ்ப்பாணம் 29° ⛅ கண்டி 26° ⛅ மட்டக்களப்பு 30°
LIVE
28 ஆண்டுகால சாதனையை முறியடித்த ஜேர்மனியின் ஜூலியன் வெபர்!நாட்டின் பல பகுதிகளில் இன்று பல தடவைகள் மழைக்கு வாய்ப்பு!எல்ல சுற்றுலாத்துறைக்கு ரூ.1,000 மில்லியனுக்கும் அதிகமான அபிவிருத்தித் திட்டங்கள்!அம்பாறை மீனவர்களின் பிரச்சினைகளுக்கு விரைவான தீர்வு!ஜனாதிபதியுடனான கலந்துரையாடலின் முழு வீடியோவை கோரும் சட்டத்தரணிகள் சங்கம்!சிறைச்சாலை அதிகாரிகளுக்கு ஆபத்தை ஏற்படுத்த திட்டமா? அதிர்ச்சித் தகவல்!திருகோணமலையில் திறமையான மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை!இந்தியாவுக்குச் சொந்தமானதா? இரணைவில கடற்கரையில் மர்ம படகு!

சீனாவுக்கு ட்ரம்ப் கடும் எச்சரிக்கை.

உலகம்October 25, 2025 · 10 months முன்2
சீனாவுக்கு ட்ரம்ப் கடும் எச்சரிக்கை.

அமெரிக்காவுக்குள் சட்டவிரோதமாக பென்டனைல் போதைப்பொருள் கடத்தப்படுவதற்கு சீனாதான் காரணம் என அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் குற்றம்சாட்டியுள்ளார்.

-ட்ரம்ப் வெள்ளை மாளிகையில் கருத்து தெரிவிக்கையில்,

சீன ஜனாதிபதியிடம் இதுகுறித்து நேரில் கேள்வி கேட்க இருப்பதாக தெரிவித்தார். மேலும், வெனிசுலா வழியாக சீனா பென்டனைலை அமெரிக்காவுக்குள் கடத்துவதாகவும், இதைத் தடுக்க தேவையான தாக்குதல்கள் நடத்தப்படும் என்றும் எச்சரித்தார்.

இது தொடர்பாக வெனிசுலாவில் உள்ள போதைப்பொருள் கடத்தல் கும்பல்களின் தரைவழி இலக்குகள் மீது தாக்குதல் நடத்தப்படும். போர் பிரகடனத்தை நாங்கள் விரும்பவில்லை. ஆனால் அமெரிக்காவிற்குள் போதைப்பொருட்களை கொண்டு வருபவர்களை கொல்லப் போகிறோம்’ என்று கூறினார்.

இந்நிலையில், ட்ரம்ப் மற்றும் சீன ஜனாதிபதி வரும் 30ஆம் திகதி தென் கொரியாவில் நடைபெறும் APEC உச்சி மாநாட்டில் சந்திக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.