2026 September 15, Tuesday ⛅ கொழும்பு 28° 🌧️ யாழ்ப்பாணம் 29° ⛅ கண்டி 23° 🌧️ மட்டக்களப்பு 27°
LIVE
ஊழலுக்கு கட்சிப் பேதமின்றி நடவடிக்கை – ஹரிணி!நெல் கொள்முதல் தடைப்படாமல் தொடர அரசு நடவடிக்கை!MiG போர் விமானக் கொள்முதல் – மீண்டும் சூடு பிடிக்கும் விசாரணை!ஜனாதிபதி செயலகத்தை பார்வையிட்ட மாணவர்களுக்கு பிரதமரின் செய்தி!இன்று இரவு வரை பலத்த மின்னல் எச்சரிக்கை!மண்சரிவு அபாயம் அதிகரிப்பு – பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்கவும்!பள்ளிக் கல்வியில் பெரிய மாற்றம் – புதிய பாடத்திட்டம் தயாராகிறது!தாய்லாந்தில் இலங்கையர்களுக்கு மெகா வேலைவாய்ப்பு!

மண்சரிவு அபாயம் அதிகரிப்பு – பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்கவும்!

உள்ளூர்September 15, 2026 · 6 hours முன்4
மண்சரிவு அபாயம் அதிகரிப்பு – பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்கவும்!

கொழும்பு, களுத்துறை மற்றும் கேகாலை ஆகிய மாவட்டங்களின் பல பகுதிகளுக்கு முதலாம் கட்ட மண்சரிவு விழிப்புணர்வு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது. 

இன்று (15) காலை 10.00 மணிக்கு தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தினால் (NBRO) வெளியிடப்பட்டுள்ள இந்த அறிவித்தல், நாளை (16) காலை 10.00 மணி வரையிலான 24 மணித்தியாலங்களுக்குச் செல்லுபடியாகும். 

இதற்கமைய, கொழும்பு மாவட்டத்தின் சீதாவக்க பிரதேச செயலகப் பிரிவு மற்றும் அதனைச் சூழவுள்ள பகுதிகள், களுத்துறை மாவட்டத்தின் தொடங்கொட, புளத்சிங்ஹல, பேருவளை, இங்கிரிய, மத்துகம, பாலிந்தநுவர மற்றும் வலல்லாவிட்ட ஆகிய பகுதிகள், அத்துடன் கேகாலை மாவட்டத்தின் வரகாப்பொல மற்றும் ருவன்வெல்ல ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகள் மற்றும் அதனைச் சூழவுள்ள பகுதிகளுக்கு இந்த அறிவித்தல் பொருந்தும் என அதில் அறிவிக்கப்பட்டுள்ளது.