முத்தரப்பு கிரிக்கெட் தொடரில் இலங்கை அணி

இலங்கை, பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகளுக்கு இடையிலான முத்தரப்பு கிரிக்கெட் தொடர் நடைபெறவுள்ளது.
இந்தப் போட்டிகள், ராவல்பிண்டி சர்வதேச விளையாட்டரங்கிலும், லாகூரின் கடாபி விளையாட்டரங்கிலும் எதிர்வரும் நவம்பர் மாதமளவில் ஆரம்பமாகவுள்ளன.
குறித்த கிரிக்கெட் போட்டித் தொடர், எதிர்வரும் நவம்பர் மாதம் 17ஆம் திகதி முதல் 29ஆம் திகதி வரை நடைபெறவுள்ளதாக ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.
இதன்படி, முதலாவது போட்டியில் பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகள் மோதவுள்ளன.




