எல்ல – வெல்லவாய விபத்துக்குள்ளான பேருந்து : அரச பகுப்பாய்வாளரால் ஆய்வு.

எல்ல – வெல்லவாய பகுதியில் பாரிய விபத்துக்குள்ளான பேருந்து தொடர்பிலான விசாரணைகள் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக இன்று (08) அரச பகுப்பாய்வாளரால் பேருந்து பரிசோதிக்கப்படவுள்ளது.
மேலும், விபத்தில் சிக்கிய ஜீப் மற்றும் சேதமடைந்த பேருந்து பாகங்கள் நேற்று (07) எல்ல பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டன.
மோட்டார் போக்குவரத்து திணைக்கள அதிகாரிகளும் இன்று பேருந்து பாகங்களை ஆய்வு செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.




