நாமல் ராஜபக்ச வழக்கு ஒக்டோபர் 29-க்கு ஒத்திவைப்பு!

நிதித்தூய்தாக்கல் தடுப்புச் சட்டத்தின் கீழ் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவுக்கு எதிரான வழக்கு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது, இரு தனியார் வங்கிக் கணக்குகள் தொடர்பான மேலதிகத் தகவல்களைப் பெறுவதற்கு அனுமதி கோரி குற்றப் புலனாய்வுத் திணைக்களம் விடுத்த வேண்டுகோளை நீதவான் அசங்க எஸ்.போதாரகம ஏற்றுக்கொண்டார்.
இன்றையதினம் நாமல் ராஜபக்ச உள்ளிட்ட சந்தேகநபர்கள் நீதிமன்றத்தில் முன்னிலையாகியிருந்த நிலையில், வழக்கின் விசாரணைகளை எதிர்வரும் ஒக்டோபர் 29ஆம் திகதிக்கு ஒத்திவைத்த நீதவான், அன்றைய தினம் விசாரணைகளின் முன்னேற்ற அறிக்கையைச் சமர்ப்பிக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.




