மழையுடனான வானிலை மற்றும் பலத்த காற்று எச்சரிக்கை!

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள புதிய முன்னறிவிப்பின்படி, சப்ரகமுவ மாகாணம், கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்களில் அவ்வப்போது மழை பெய்யக்கூடும். மேல் மற்றும் வடமேல் மாகாணங்களில் சிறிதளவு மழை பெய்ய வாய்ப்புள்ளதுடன், நாட்டின் ஏனைய பகுதிகளில் பிரதானமாக வறண்ட வானிலை நிலவும்.
மேலும், மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகள், வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்கள், மொனராகலை, ஹம்பாந்தோட்டை, திருகோணமலை மற்றும் மன்னார் மாவட்டங்களில் மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.