2026 August 16, Sunday ⛅ கொழும்பு 28° ⛅ யாழ்ப்பாணம் 29° ⛅ கண்டி 27° ⛅ மட்டக்களப்பு 31°
LIVE
கரைதுறைப்பற்று பிரதேச சபை உப தவிசாளர் உட்பட ஐவர் கைது!நிதி முறைகேடுகள் தொடர்பான தகவல்களை வழங்குமாறு பயனாளிகளுக்கு கோரிக்கை!யாழ்ப்பாண மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதியால் புதிய வீடு கையளிப்பு!நாடு முழுவதும் 96 பகுதிகள் அதிஅபாய டெங்கு வலயங்களாக அடையாளம்!அவுஸ்திரேலியாவை 9 விக்கெட்டுகளால் வீழ்த்தி பங்களாதேஷ் வரலாற்று வெற்றி!நாட்டின் பெரிய வெங்காயத் தேவையில் 50% உள்நாட்டில் உற்பத்தி செய்ய திட்டம்!கடுவெல வழியாக பயணிப்போருக்கு பொலிஸாரின் முக்கிய அறிவிப்பு!28 ஆண்டுகால சாதனையை முறியடித்த ஜேர்மனியின் ஜூலியன் வெபர்!

குழந்தைகளின் ஆன்லைன் பாதுகாப்புக்கு புதிய சட்டம்!

உள்ளூர்July 13, 2026 · 1 month முன்2
குழந்தைகளின் ஆன்லைன் பாதுகாப்புக்கு புதிய சட்டம்!


சிறுவர்கள் சமூக ஊடகத் தளங்களைப் பயன்படுத்துவதைக் கட்டுப்படுத்துவதற்கான முன்மொழிவொன்றை, கோடைக்காலத்திற்குப் பிறகு ஐரோப்பிய ஆணையம் சமர்ப்பிக்கும் என்று அதன் தலைவர் உர்சுலா வொன் டெர் லேயன் இன்று தெரிவித்துள்ளார். 

பிரஸ்ஸல்ஸில் செய்தியாளர்களிடம் பேசிய வொன் டெர் லேயன், “நம் குழந்தைகளுக்கு நிஜ உலகில் செலவிட நேரம் தேவை. 

விளையாடுவதற்கும், நட்பை உருவாக்குவதற்கும், தவறுகளைச் செய்து கற்றுக்கொள்வதற்கும் அவர்களுக்கு நேரம் தேவைப்படுகிறது. 

ஒரு அல்காரிதம் (Algorithm) அவர்களின் அடையாளத்தை வடிவமைப்பதற்கு முன்பாக, அவர்கள் தங்களின் சொந்த அடையாளத்தையும் ஆளுமையையும் வடிவமைத்துக் கொள்ள நேரம் அவசியம்” என்று கூறினார். 

மேலும், “இது குழந்தைகள் சமூக ஊடகங்களை அணுக முடியுமா என்பது பற்றியது அல்ல. சமூக ஊடகங்கள் நம் குழந்தைகளை அணுகலாமா மற்றும் எப்போது அணுகலாம் என்பது பற்றியதே ஆகும்” என்றும் அவர் குறிப்பிட்டார்.