2026 August 15, Saturday 🌧️ கொழும்பு 29° ⛅ யாழ்ப்பாணம் 30° 🌧️ கண்டி 27° 🌧️ மட்டக்களப்பு 35°
LIVE
ஜனாதிபதியுடனான கலந்துரையாடலின் முழு வீடியோவை கோரும் சட்டத்தரணிகள் சங்கம்!சிறைச்சாலை அதிகாரிகளுக்கு ஆபத்தை ஏற்படுத்த திட்டமா? அதிர்ச்சித் தகவல்!திருகோணமலையில் திறமையான மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை!இந்தியாவுக்குச் சொந்தமானதா? இரணைவில கடற்கரையில் மர்ம படகு!Google Maps-ல் புதிய AI வழிகாட்டி – பயணம் இனி இன்னும் எளிது!தினசரி உடற்பயிற்சி – ஆரோக்கியமான நீண்ட ஆயுளுக்கு முதல் படி!சருமம் முதல் கூந்தல் வரை – ஓமம் தண்ணீரின் அழகு ரகசியங்கள்!தினசரி புரதத் தேவையை பூர்த்தி செய்ய உதவும் சிறந்த உணவுகள்!

அமெரிக்கா–ஈரான் உறவில் புதிய திருப்பம்

உலகம்June 15, 2026 · 2 months முன்2
அமெரிக்கா–ஈரான் உறவில் புதிய திருப்பம்


ஈரானுடனான அமைதி உடன்படிக்கை தற்போது முழுமையடைந்துள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். 

அவர் தமது ட்ருத் சமூக வலைத்தளத்தில் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். 

அதற்கமைய, ஹோர்முஸ் அருகே முன்னெடுக்கப்பட்டுள்ள அமெரிக்க கடற்படை முற்றுகையை உடனடியாக நீக்குவதற்கு தாம் இணங்கியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 

இதில் மத்தியஸ்தராகச் செயல்பட்ட பாகிஸ்தான் பிரதமர் ஷேபாஸ் ஷெரீப், உள்ளூர் நேரப்படி திங்கட்கிழமை அதிகாலையில் இந்த ஒப்பந்தம் எட்டப்பட்டுள்ளதாக அறிவித்த சில நிமிடங்களிலேயே ட்ரம்பின் இந்தப் பதிவு வெளியானது. 

இந்த ஒப்பந்தம் எதிர்வரும் வெள்ளிக்கிழமை சுவிட்சர்லாந்தில் அதிகாரப்பூர்வமாகக் கையெழுத்திடப்படும் என்று ஷெரீப் குறிப்பிட்டுள்ளார். 

அதேநேரம் அமைதி புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் இறுதி செய்யப்பட்ட வரைவில் ஈரானும், அமெரிக்காவும் ஜூன் 19 ஆம் திகதி சுவிட்சர்லாந்தில் கையெழுத்திடும் என்று சட்ட மற்றும் சர்வதேச விவகாரங்களுக்கான ஈரானிய துணை வெளியுறவு அமைச்சர் காசெம் கரீபாபாடி தெரிவித்துள்ளதாக தஸ்நிம் செய்தி நிறுவனமும் தகவல் வௌியிட்டுள்ளது.