விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் உயிரிழப்பு

யாழ்ப்பாணத்தில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் உயிரிழந்த சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.
அண்மையில் சிறுவன் பட்டம் விட்டு விளையாடிக் கொண்டிருந்தபோது திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது.
அவரை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு சென்றபோது, அங்கு அவர் மயக்கமடைந்துள்ளார். அத்துடன் சிகிச்சை பலனளிக்காத நிலையில், நேற்று மாலை அவர் உயிரிழந்துள்ளார்.
சுன்னாகம் தெற்கு பகுதியைச் சேர்ந்த கேதீஸ்குமார் கார்த்திகேயன் (வயது 07) என்ற சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
சிறுவனின் மரணம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.




