புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளிள் முதலிடம்.

2025 ஆம் ஆண்டுக்கான தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் நேற்று வெளியாகிருந்த நிலையில், பெறுபேறுகளின்படி, அகில இலங்கை அளவில் சிங்கள மொழி மூலம் காலி மாவட்டத்தைச் சேர்ந்த மாணவர் முதலிடம் பிடித்துள்ளார்.
அவர் 198 புள்ளிகளைப் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, தமிழ் மொழியில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த மாணவர் முதலிடம் பிடித்துள்ளார். அவர் 194 புள்ளிகளைப் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.




