2026 August 17, Monday ⛅ கொழும்பு 28° ⛅ யாழ்ப்பாணம் 30° 🌧️ கண்டி 28° ☀️ மட்டக்களப்பு 32°
LIVE
நெல் சந்தைப்படுத்தல் சபையின் நெல் கொள்வனவு நடவடிக்கைகள் தொடர்கின்றன!வனஜீவராசிகள் கால்நடை வைத்தியர்களின் தொழிற்சங்க நடவடிக்கை தொடர்கிறது!கால்பந்துக்கு விடை கொடுக்கிறாரா ரொனால்டோ? ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கிய அறிவிப்பு!இந்தியாவின் 462 ஓட்டங்களுக்கு பதிலடி கொடுக்க களமிறங்கும் இலங்கை!14 மாடிக் குடியிருப்பிலிருந்து கீழே விழுந்த சிறுவன் உயிரிழப்பு!7.7 ரிக்டர் நிலநடுக்கத்தைத் தொடர்ந்து புளோரஸில் மீண்டும் சக்திவாய்ந்த அதிர்வு!கரைதுறைப்பற்று பிரதேச சபை உப தவிசாளர் உட்பட ஐவர் கைது!நிதி முறைகேடுகள் தொடர்பான தகவல்களை வழங்குமாறு பயனாளிகளுக்கு கோரிக்கை!

இந்தியா – பாகிஸ்தான் வான்பரப்புத் தடை நீடிப்பு

உலகம்April 24, 2026 · 4 months முன்2
இந்தியா – பாகிஸ்தான் வான்பரப்புத் தடை நீடிப்பு

இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையிலான வான்பரப்புத் தடை உத்தரவு மேலும் ஒரு மாத காலத்திற்கு நீடிக்கப்பட்டுள்ளது.கடந்த 2025 ஆம் ஆண்டு ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் (Pahalgam) பகுதியில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலைத் தொடர்ந்து, இரு நாடுகளும் பரஸ்பரம் வான்பரப்புத் தடையை விதித்திருந்தன.

இந்திய விமானங்கள் பாகிஸ்தான் வான்பரப்பைப் பயன்படுத்துவதற்கும், பாகிஸ்தான் விமானங்கள் இந்திய வான்பரப்பைப் பயன்படுத்துவதற்கும் இந்தத் தடை அமுல்படுத்தப்பட்டது.

தற்போது நிலவும் பாதுகாப்புச் சூழலைக் கருத்திற் கொண்டு, இந்தத் தடையை எதிர்வரும் மே மாதம் 24 ஆம் திகதி வரை நீடிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.