2026 August 16, Sunday ⛅ கொழும்பு 26° ⛅ யாழ்ப்பாணம் 28° ⛅ கண்டி 22° ⛅ மட்டக்களப்பு 26°
LIVE
எல்ல சுற்றுலாத்துறைக்கு ரூ.1,000 மில்லியனுக்கும் அதிகமான அபிவிருத்தித் திட்டங்கள்!அம்பாறை மீனவர்களின் பிரச்சினைகளுக்கு விரைவான தீர்வு!ஜனாதிபதியுடனான கலந்துரையாடலின் முழு வீடியோவை கோரும் சட்டத்தரணிகள் சங்கம்!சிறைச்சாலை அதிகாரிகளுக்கு ஆபத்தை ஏற்படுத்த திட்டமா? அதிர்ச்சித் தகவல்!திருகோணமலையில் திறமையான மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை!இந்தியாவுக்குச் சொந்தமானதா? இரணைவில கடற்கரையில் மர்ம படகு!Google Maps-ல் புதிய AI வழிகாட்டி – பயணம் இனி இன்னும் எளிது!தினசரி உடற்பயிற்சி – ஆரோக்கியமான நீண்ட ஆயுளுக்கு முதல் படி!

மின்சார நுகர்வோர் சங்கம் விடுத்த கோரிக்கை

உள்ளூர்April 9, 2026 · 4 months முன்2
மின்சார நுகர்வோர் சங்கம்  விடுத்த கோரிக்கை

நாட்டின் பல பகுதிகளில் கடந்த திங்கட்கிழமை இரவு ஏற்பட்ட மின்சாரத் தடை தொடர்பாக இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என மின்சார நுகர்வோர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

இது தொடர்பாக கருத்து தெரிவித்த மின்சார நுகர்வோர் சங்கத்தின் பொதுச் செயலாளர் சஞ்சீவ தம்மிக, 24 மணிநேரமும் மின்சாரத்தை தடையின்றி வழங்குவதாக உறுதியளித்தே மின்சாரக் கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டன எனச் சுட்டிக்காட்டினார்.

எனவே, தடையின்றி மின்சாரத்தை வழங்க முடியாவிட்டால், அதிகரிக்கப்பட்ட கட்டணங்களை மீண்டும் திருத்த வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

திங்கட்கிழமை ஏற்பட்ட மின்வெட்டானது சாதாரண தொழில்நுட்பக் கோளாறு அல்ல எனத் தெரிவித்த அவர், இவ்வாறான பாதிப்புகள் ஏற்படக்கூடும் என்பதை அதிகாரிகள் முன்கூட்டியே கணித்து அதற்கேற்ப திட்டமிட்டிருக்க வேண்டும் எனக் குற்றம் சாட்டினார்.

திவுலபிட்டிய, கட்டுநாயக்க, கட்டான, அத்துருகிரிய மற்றும் கதிர்காமம் போன்ற பகுதிகளில் சுமார் ஒரு மணிநேரம் மின்சாரம் தடைப்பட்டிருந்தது. இதனால் மருத்துவமனை சேவைகள், மாணவர்களின் கல்வி மற்றும் சுயதொழில் செய்பவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார்.