2026 August 16, Sunday ⛅ கொழும்பு 27° ⛅ யாழ்ப்பாணம் 28° ⛅ கண்டி 23° ⛅ மட்டக்களப்பு 30°
LIVE
கரைதுறைப்பற்று பிரதேச சபை உப தவிசாளர் உட்பட ஐவர் கைது!நிதி முறைகேடுகள் தொடர்பான தகவல்களை வழங்குமாறு பயனாளிகளுக்கு கோரிக்கை!யாழ்ப்பாண மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதியால் புதிய வீடு கையளிப்பு!நாடு முழுவதும் 96 பகுதிகள் அதிஅபாய டெங்கு வலயங்களாக அடையாளம்!அவுஸ்திரேலியாவை 9 விக்கெட்டுகளால் வீழ்த்தி பங்களாதேஷ் வரலாற்று வெற்றி!நாட்டின் பெரிய வெங்காயத் தேவையில் 50% உள்நாட்டில் உற்பத்தி செய்ய திட்டம்!கடுவெல வழியாக பயணிப்போருக்கு பொலிஸாரின் முக்கிய அறிவிப்பு!28 ஆண்டுகால சாதனையை முறியடித்த ஜேர்மனியின் ஜூலியன் வெபர்!

ஈரான் அணுமின் நிலையம் மீது தாக்குதல்

உலகம்April 5, 2026 · 4 months முன்1
ஈரான் அணுமின் நிலையம் மீது தாக்குதல்

ஈரானின் ஒரே செயல்பாட்டு அணுமின் நிலையமான புஷெர் அணுமின் நிலையத்தை இலக்கு வைத்து நடத்தப்பட்ட தாக்குதல்களால், பாரிய கதிர்வீச்சு கசிவு ஏற்படும் அபாயம் உள்ளதாக ஈரான் சர்வதேச சமூகத்திற்கு அதிரடி எச்சரிக்கை விடுத்துள்ளது.

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவி வரும் போர் பதற்றங்களுக்கு மத்தியில், புஷெர் அணுமின் நிலையத்திற்கு மிக அருகில் அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய படைகள் தாக்குதல் நடத்தியுள்ளதாக ஈரான் குற்றம் சாட்டியுள்ளது.

இது அணுசக்தி பாதுகாப்பு விதிகளை மீறும் செயல் என ஈரான் சுட்டிக்காட்டியுள்ளது.இந்த விவகாரம் தொடர்பாக ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் அப்பாஸ் அராக்ஷி, ஐநா பொதுச்செயலாளர் அந்தோனியோ குட்டெரெஸிற்கு அவசரக் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.