2026 August 16, Sunday ⛅ கொழும்பு 27° ⛅ யாழ்ப்பாணம் 28° ⛅ கண்டி 22° ⛅ மட்டக்களப்பு 29°
LIVE
கரைதுறைப்பற்று பிரதேச சபை உப தவிசாளர் உட்பட ஐவர் கைது!நிதி முறைகேடுகள் தொடர்பான தகவல்களை வழங்குமாறு பயனாளிகளுக்கு கோரிக்கை!யாழ்ப்பாண மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதியால் புதிய வீடு கையளிப்பு!நாடு முழுவதும் 96 பகுதிகள் அதிஅபாய டெங்கு வலயங்களாக அடையாளம்!அவுஸ்திரேலியாவை 9 விக்கெட்டுகளால் வீழ்த்தி பங்களாதேஷ் வரலாற்று வெற்றி!நாட்டின் பெரிய வெங்காயத் தேவையில் 50% உள்நாட்டில் உற்பத்தி செய்ய திட்டம்!கடுவெல வழியாக பயணிப்போருக்கு பொலிஸாரின் முக்கிய அறிவிப்பு!28 ஆண்டுகால சாதனையை முறியடித்த ஜேர்மனியின் ஜூலியன் வெபர்!

இன்று இரவு முதல் 12 மணிநேர நீர்வெட்டு!

உள்ளூர்April 5, 2026 · 4 months முன்1
இன்று இரவு முதல் 12 மணிநேர நீர்வெட்டு!

பாதுக்கை மற்றும் அதனைச் சூழவுள்ள பகுதிகளில் இன்று இரவு 8 மணி முதல் நாளை காலை 8 மணி வரை 12 மணிநேர நீர் வெட்டு அமுல்படுத்தப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

நீர் சுத்திகரிப்பு நிலையங்களுக்கு நீர் வழங்கும் லபுகம மற்றும் களுதுவாவ நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் வேகமாக வீழ்ச்சியடைந்து வருவதால், அவற்றின் உற்பத்தித் திறன் வரையறுக்கப்பட்டுள்ளதாக அந்தச் சபை விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன் காரணமாக, குறித்த சுத்திகரிப்பு நிலையங்கள் மூலம் நீர் விநியோகம் செய்யப்படும் பகுதிகளுக்கு இவ்வாறு நீர் விநியோகத்தைக் கட்டுப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, இன்று (05) ஞாயிற்றுக்கிழமை இரவு 8 மணி முதல் நாளை திங்கட்கிழமை காலை 8.00 மணி வரை இந்த நீர்வெட்டு அமுலில் இருக்கும் என தேசிய நீர் வழங்கல் சபை அறிவித்துள்ளது.