2026 August 15, Saturday ⛅ கொழும்பு 29° ⛅ யாழ்ப்பாணம் 30° 🌧️ கண்டி 27° ⛅ மட்டக்களப்பு 32°
LIVE
இந்தியாவின் 80ஆவது சுதந்திர தினம் இன்று கோலாகல கொண்டாட்டம்ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்கள் தொடர்பில் ஷிரான் பாசிக்கிடம் விசாரணை!இந்தோனேசியாவை உலுக்கிய நிலநடுக்கம்அடுத்தடுத்து 3 அதிர்வுகள்!பல பகுதிகளில் இன்று மழை,வளிமண்டலவியல்திணைக்கம் அறிவிப்பு!இலங்கையின் பொருளாதார வளர்ச்சி சீராக இருக்கும் – மத்திய வங்கி கணிப்பு!22ஆவது அரசியலமைப்புத் திருத்தம் 18ஆம் திகதி பாராளுமன்றத்தில்!டெங்கு வேகமாக பரவுகிறதா? நோயாளர்கள் எண்ணிக்கை 91 ஆயிரத்தை தாண்டியது!அமெரிக்க போர்க்கப்பலில் உணவுப் பற்றாக்குறை – ஆயிரக்கணக்கான வீரர்கள் அவதி?

கட்டுநாயக்கவில் 2.5 கிலோ ‘குஷ்’ பறிமுதல் : தாய்லாந்திலிருந்து கடத்தி வந்த பயணி கைது..

உள்ளூர்April 25, 2026 · 4 months முன்1

தாய்லாந்திலிருந்து இலங்கைக்கு சூட்சுமமான முறையில் கடத்தி வரப்பட்ட சுமார் 25 மில்லியன் ரூபாய் பெறுமதியான ‘குஷ்’ வகை போதைப்பொருளுடன் கொழும்பைச் சேர்ந்த பயணி ஒருவர் இன்று அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

தாய்லாந்தின் பாங்காக் நகரிலிருந்து இன்று அதிகாலை 01.25 மணியளவில் தாய் ஏர்ஏசியா (FD-140) விமானம் மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த 33 வயதுடைய நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

கொழும்பில் புகைப்படக் கலைஞராகப் பணியாற்றும் இவர், தனது பயணப் பொதியில் எவ்வித பொருட்களும் இல்லை எனக் கூறி, விமான நிலையத்தின் ‘பசுமை வழி’ (Green Channel) ஊடாக வெளியேற முயற்சித்துள்ளார்.

அவரது நடவடிக்கையில் சந்தேகமடைந்த சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவு அதிகாரிகள், அவரது பயணப் பொதிகளை தீவிர சோதனைக்கு உட்படுத்தினர். இதன்போது:

உலர் பழங்கள் அடங்கிய பொட்டலங்களுக்குள் மிக லாவகமாக மறைத்து வைக்கப்பட்டிருந்த 2 கிலோகிராம் 505 கிராம் எடையுள்ள ‘குஷ்’ போதைப்பொருள் கண்டெடுக்கப்பட்டது.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் மேலதிக விசாரணைகளுக்காக போதைப்பொருள் மற்றும் ஏனைய சான்றுப் பொருட்களுடன் வானூர்தி நிலைய காவல்துறை போதைப்பொருள் தடுப்புப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.