2026 August 16, Sunday ⛅ கொழும்பு 27° ⛅ யாழ்ப்பாணம் 28° ⛅ கண்டி 24° 🌧️ மட்டக்களப்பு 30°
LIVE
கரைதுறைப்பற்று பிரதேச சபை உப தவிசாளர் உட்பட ஐவர் கைது!நிதி முறைகேடுகள் தொடர்பான தகவல்களை வழங்குமாறு பயனாளிகளுக்கு கோரிக்கை!யாழ்ப்பாண மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதியால் புதிய வீடு கையளிப்பு!நாடு முழுவதும் 96 பகுதிகள் அதிஅபாய டெங்கு வலயங்களாக அடையாளம்!அவுஸ்திரேலியாவை 9 விக்கெட்டுகளால் வீழ்த்தி பங்களாதேஷ் வரலாற்று வெற்றி!நாட்டின் பெரிய வெங்காயத் தேவையில் 50% உள்நாட்டில் உற்பத்தி செய்ய திட்டம்!கடுவெல வழியாக பயணிப்போருக்கு பொலிஸாரின் முக்கிய அறிவிப்பு!28 ஆண்டுகால சாதனையை முறியடித்த ஜேர்மனியின் ஜூலியன் வெபர்!

டெக்சாஸில் மெக்சிகோ மருத்துவ விமானம் விபத்து – 5 பேர் பலி

உலகம்December 23, 2025 · 8 months முன்2
டெக்சாஸில் மெக்சிகோ மருத்துவ விமானம் விபத்து – 5 பேர் பலி

அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தில் அமைந்துள்ள கல்வெஸ்டன் விரிகுடா அருகே, மெக்சிகோவுக்குச் சொந்தமான மருத்துவ சேவை விமானம் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது.

விபத்து ஏற்பட்ட சமயம் விமானத்தில் எட்டு பேர் இருந்தனர். அவர்களில் நால்வர் பொதுமக்களாகவும், மீதமுள்ள நால்வர் மெக்சிகோ கடற்படையினராகவும் இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த விபத்தில் ஐந்து பேர் உயிரிழந்துள்ளதாகவும், அவர்களில் இரண்டு வயது சிறுமி ஒருவரும் அடங்குவதாகவும் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இருவர் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ள நிலையில், இன்னொருவரைத் தேடும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

தீக்காயங்களுக்கு சிகிச்சை அளிக்கும் முகாமில் பங்கேற்பதற்காகவே குறித்த விமானம் பயணித்ததாக மெக்சிகோ கடற்படை உறுதிப்படுத்தியுள்ளது. விபத்து நேர்ந்த போது அப்பகுதியில் நிலவிய அடர்த்தியான பனிமூட்டமே காரணமாக இருக்கலாம் என அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.