2026 August 16, Sunday ⛅ கொழும்பு 27° ⛅ யாழ்ப்பாணம் 28° ⛅ கண்டி 23° ⛅ மட்டக்களப்பு 30°
LIVE
கரைதுறைப்பற்று பிரதேச சபை உப தவிசாளர் உட்பட ஐவர் கைது!நிதி முறைகேடுகள் தொடர்பான தகவல்களை வழங்குமாறு பயனாளிகளுக்கு கோரிக்கை!யாழ்ப்பாண மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதியால் புதிய வீடு கையளிப்பு!நாடு முழுவதும் 96 பகுதிகள் அதிஅபாய டெங்கு வலயங்களாக அடையாளம்!அவுஸ்திரேலியாவை 9 விக்கெட்டுகளால் வீழ்த்தி பங்களாதேஷ் வரலாற்று வெற்றி!நாட்டின் பெரிய வெங்காயத் தேவையில் 50% உள்நாட்டில் உற்பத்தி செய்ய திட்டம்!கடுவெல வழியாக பயணிப்போருக்கு பொலிஸாரின் முக்கிய அறிவிப்பு!28 ஆண்டுகால சாதனையை முறியடித்த ஜேர்மனியின் ஜூலியன் வெபர்!

ரயிலில் மோதி காட்டு யானை உயிரிழப்பு!

உள்ளூர்February 17, 2026 · 6 months முன்0
ரயிலில் மோதி காட்டு யானை உயிரிழப்பு!

கொழும்பிலிருந்து திருகோணமலை நோக்கிப் பயணித்த இலக்கம் 943 தபால் ரயில், இன்று (17) அதிகாலை கித்துல்உத்துவ 151ஆவது மைல்கல் அருகே காட்டு யானையுடன் மோதி தடம் புரண்டது.

இந்த விபத்தில் காட்டு யானை சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளது.

காட்டு யானை ரயிலின் இயந்திரத்தில் மோதியதுடன், அதன் காலின் ஒரு பகுதி இயந்திரத்தில் சிக்கியதன் காரணமாகவே ரயில் இவ்வாறு தடம் புரண்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

கவுடுல்ல வனப்பகுதியிலிருந்து சோமாவதிய வனப்பகுதிக்கு தண்டவாளத்தைக் கடந்து செல்ல முயன்றபோதே இந்த விபத்து நேர்ந்துள்ளதாக வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்தனர்.

உயிரிழந்த யானை சுமார் 15 வயதுடையது எனவும், அது சுமார் 7 அடி உயரம் கொண்டது எனவும் அதிகாரிகள் மேலும் குறிப்பிட்டனர்.