2026 August 17, Monday 🌧️ கொழும்பு 25° ⛅ யாழ்ப்பாணம் 28° ⛅ கண்டி 22° ⛅ மட்டக்களப்பு 27°
LIVE
கரைதுறைப்பற்று பிரதேச சபை உப தவிசாளர் உட்பட ஐவர் கைது!நிதி முறைகேடுகள் தொடர்பான தகவல்களை வழங்குமாறு பயனாளிகளுக்கு கோரிக்கை!யாழ்ப்பாண மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதியால் புதிய வீடு கையளிப்பு!நாடு முழுவதும் 96 பகுதிகள் அதிஅபாய டெங்கு வலயங்களாக அடையாளம்!அவுஸ்திரேலியாவை 9 விக்கெட்டுகளால் வீழ்த்தி பங்களாதேஷ் வரலாற்று வெற்றி!நாட்டின் பெரிய வெங்காயத் தேவையில் 50% உள்நாட்டில் உற்பத்தி செய்ய திட்டம்!கடுவெல வழியாக பயணிப்போருக்கு பொலிஸாரின் முக்கிய அறிவிப்பு!28 ஆண்டுகால சாதனையை முறியடித்த ஜேர்மனியின் ஜூலியன் வெபர்!

உலகின் முதல் டிரில்லியனர் யார்? முன்னிலையில் மஸ்க்!

உலகம்June 7, 2026 · 2 months முன்2
உலகின் முதல் டிரில்லியனர் யார்? முன்னிலையில் மஸ்க்!

உலகின் முன்னணி தொழிலதிபர்களில் ஒருவரான ஈலோன் மஸ்க், ஒரு டிரில்லியன் அமெரிக்க டொலர் சொத்து மதிப்பை எட்டும் முதல் நபராக மாறக்கூடும் என சர்வதேச பொருளாதார ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

குறிப்பாக, அவரது விண்வெளி ஆய்வு நிறுவனமான SpaceX மற்றும் பல்வேறு தொழில்நுட்ப முதலீடுகளின் தொடர்ச்சியான வளர்ச்சி, அவரது சொத்து மதிப்பை வேகமாக அதிகரித்து வருவதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

பொருளாதார ஆய்வாளர்கள் வெளியிட்டுள்ள மதிப்பீடுகளின்படி, தற்போதைய வளர்ச்சி வேகம் தொடருமானால், எதிர்வரும் ஆண்டுகளில் ஈலோன் மஸ்கின் மொத்த சொத்து மதிப்பு ஒரு டிரில்லியன் டொலர் என்ற வரலாற்றுச் சாதனையை எட்டக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது உலகின் செல்வந்தர்களின் பட்டியலில் முன்னணி இடத்தை வகித்து வரும் மஸ்க், மின்சார வாகனங்கள், விண்வெளி தொழில்நுட்பம், செயற்கை நுண்ணறிவு மற்றும் தொலைத்தொடர்பு உள்ளிட்ட பல துறைகளில் முதலீடுகளை மேற்கொண்டு வருகிறார்.

ஒரு டிரில்லியன் டொலர் சொத்து மதிப்பை எட்டும் முதல் நபர் யார் என்ற உலகளாவிய விவாதம் நீடித்து வரும் நிலையில், அதற்கான முக்கிய போட்டியாளராக ஈலோன் மஸ்க் பார்க்கப்படுகிறார்.