2026 August 15, Saturday ⛅ கொழும்பு 29° ⛅ யாழ்ப்பாணம் 30° 🌧️ கண்டி 27° ⛅ மட்டக்களப்பு 34°
LIVE
பேருந்து நிறுத்தங்களில் வாகனங்களை நிறுத்தினால் கடும் சட்ட நடவடிக்கை!நாணய சுழற்சி இந்தியா வசம் – முதலில் துடுப்பாட்டத்தை தேர்வு செய்தது!இந்தோனேசிய நிலநடுக்கத்தால் இலங்கைக்கு எவ்வித ஆபத்தும் இல்லை!இந்தியாவை வீழ்த்தினால் இலங்கைக்கு WTC புள்ளிப்பட்டியலில் பெரும் முன்னேற்றம்!இந்தியாவின் 80ஆவது சுதந்திர தினம் இன்று கோலாகல கொண்டாட்டம்ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்கள் தொடர்பில் ஷிரான் பாசிக்கிடம் விசாரணை!இந்தோனேசியாவை உலுக்கிய நிலநடுக்கம்அடுத்தடுத்து 3 அதிர்வுகள்!பல பகுதிகளில் இன்று மழை,வளிமண்டலவியல்திணைக்கம் அறிவிப்பு!

T-20 உலகக்கோப்பையில் இந்தியாவுக்கு எதிராக ஆடாவிட்டால் பாகிஸ்தானுக்கு என்ன பாதிப்பு?

விளையாட்டுFebruary 3, 2026 · 6 months முன்1

பிப்ரவரி 7-ஆம் தேதி தொடங்கும் T-20 உலகக் கோப்பையில், இந்தியாவிற்கு எதிரான தனது லீக் போட்டியில் விளையாட பாகிஸ்தான் மறுப்பு தெரிவித்துள்ள நிலையில், இந்த முடிவு பாகிஸ்தானின் உலகக் கோப்பை பயணத்தில் என்ன மாதிரியான பாதிப்பை ஏற்படுத்தும் என்ற கேள்வி ரசிகர்களின் மனதில் எழுந்துள்ளது.

நாக் அவுட் சுற்றுகளில் இரு அணிகளும் மோதும் சூழல் ஏற்பட்டால், அப்போதும் பாகிஸ்தான் இதே முடிவை எடுக்குமா என்றும் கேள்வி எழுகிறது.

T-20 உலகக் கோப்பையின் ஆரம்பக்கட்ட போட்டிகளுக்காக பிரிக்கப்பட்ட நான்கு பிரிவுகளில், இந்தியாவும் பாகிஸ்தானும் ‘ஏ’ பிரிவில் இடம் பிடித்துள்ளன.

இந்த போட்டிகளுக்குப் பிறகு, ஒவ்வொரு பிரிவிலிருந்தும் தலா இரண்டு அணிகள் சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெறும். பாகிஸ்தான் மற்றும் இந்தியா ஆகிய இரு அணிகளும் சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறினால், அவை வெவ்வேறு பிரிவுகளில் இருக்கும்.

அதாவது, ஆரம்ப கட்டத்திற்குப் பிறகு, இந்த இரு அணிகளும் அரையிறுதி அல்லது இறுதிப் போட்டியில் மட்டுமே ஒருவரை ஒருவர் எதிர்கொள்ள முடியும்.