2026 August 16, Sunday ⛅ கொழும்பு 29° ⛅ யாழ்ப்பாணம் 30° ⛅ கண்டி 27° 🌧️ மட்டக்களப்பு 31°
LIVE
கரைதுறைப்பற்று பிரதேச சபை உப தவிசாளர் உட்பட ஐவர் கைது!நிதி முறைகேடுகள் தொடர்பான தகவல்களை வழங்குமாறு பயனாளிகளுக்கு கோரிக்கை!யாழ்ப்பாண மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதியால் புதிய வீடு கையளிப்பு!நாடு முழுவதும் 96 பகுதிகள் அதிஅபாய டெங்கு வலயங்களாக அடையாளம்!அவுஸ்திரேலியாவை 9 விக்கெட்டுகளால் வீழ்த்தி பங்களாதேஷ் வரலாற்று வெற்றி!நாட்டின் பெரிய வெங்காயத் தேவையில் 50% உள்நாட்டில் உற்பத்தி செய்ய திட்டம்!கடுவெல வழியாக பயணிப்போருக்கு பொலிஸாரின் முக்கிய அறிவிப்பு!28 ஆண்டுகால சாதனையை முறியடித்த ஜேர்மனியின் ஜூலியன் வெபர்!

“ரகசா” புயல் தாக்கம்: சீனாவில் பெரும் சேதம், வியட்நாமை நோக்கி நகர்வு.

உலகம்September 26, 2025 · 11 months முன்0
“ரகசா” புயல் தாக்கம்: சீனாவில் பெரும் சேதம், வியட்நாமை நோக்கி நகர்வு.

தென் சீனக் கடலில் உருவான “ரகசா” புயல், தாய்வானை கடந்து சீனாவின் குவாங்டாங் மாகாணத்தை கடுமையாக தாக்கியுள்ளது. மணிக்கு 265 கிமீ வேகத்திலான பலத்த காற்றும் கனமழையும் காரணமாக, 20 இலட்சம் பேர் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டனர்.

100-க்கும் மேற்பட்ட விமானங்கள் இரத்து செய்யபட்டன, மேலும் கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. 10,000 மரங்கள் மற்றும் மின்கம்பங்கள் சேதமடைந்துள்ளன. சுமார் 5 இலட்சம் வீடுகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்ட்டுள்ளதாகவும், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மக்கள் வெளியேற்றப்பட்டு, நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

குறிப்பாக தற்போது “ரகசா” புயல் வியட்நாமை நோக்கி நகர்ந்து செல்கின்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.