ட்ரம்ப் – “நான் இந்தியாவுக்கு மிகவும் நெருக்கமானவன்”

அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், ‘நான் இந்தியாவுக்கு மிகவும் நெருக்கமானவன்” என அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
ஐரோப்பிய நாடுகள் ரஷ்யாவிலிருந்து எண்ணெய் வாங்குகின்றன. என்பது எனக்கு நன்கு தெரியும். நான் இந்தியாவுக்கும், இந்திய பிரதமர் மோடிக்கும் மிகவும் நெருக்கமானவன். நான் அவரிடம் பேசினேன். அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்தேன். எங்களுக்குள் மிக சிறந்த உறவு உள்ளது.
மிக எளிமையாக சொன்னால் எண்ணெய் விலை குறைந்தால் புட்டின் வெளியேறப் போகிறார். அவருக்கு வேறு வழியில்லை. அவர் அந்த போரிலிருந்து வெளியேறப் போகிறார். உக்ரைன் போரை தீர்ப்பது எளிதானது என நினைத்தேன். புட்டின் என்னை ஏமாற்றிவிட்டார். இவ்வாறு ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.




