நேபாளத்தில் போராட்டம்

நேபாளத்தில் சுமார் 26 சமூக ஊடகங்களுக்கு தடை விதிக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
குறித்த போராட்டம் நேபாளம் காத்மாண்டுவில் இடம்பெற்றுள்ளது.
இதில் இளைஞர்கள், பாடசாலை மாணவர்கள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோர் கலந்துள்ளனர்.
நேபாளத்தின் நாடாளுமன்றத்தை போராட்டக்காரர்கள் சூழ்ந்ததால் தலைநகர் காத்மாண்டுவில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் போராட்டத்தின் போது அந்நாட்டு பொலிஸார் துப்பாக்கிச் சூடு மேற்கொண்டதில் 14 பேர் வரை உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.




