நேபாளத்தில் மண்சரிவு – பல உயிர்கள் பலி.

நேபாளத்தில் கனமழை பெய்துவரும் நிலையில்,வெள்ளம் காரணமாக ஏற்பட்ட மண்சரிவில் சிக்கி 60 பேர் உயிரிழந்துள்ளனர்.
வெள்ளத்தில் சிக்கியவர்களை இராணுவ ஹெலிகொப்டர் மூலம் மீட்கும் பணியில் நேபாள இராணுவம் ஈடுபட்டுள்ளது. மேலும் மீட்புப் பணிகள் தீவிரமாக இடம்பெற்று வருகின்றது.
பாதிக்கப்பட்ட மக்களை இராணுவத்தினர் மீட்டு பாதுகாப்பான இடங்களில் தங்கவைத்துள்ளனர். இருப்பினும் தொடர்ந்து மழை பெய்து வருவதால் மீட்பு பணியில் தாமதம் ஏற்பட்டுள்ளது.




