காஸாவில் போர் நிறுத்தம் அமுலுக்கு வரும் – ட்ரம்ப் உறுதி !

காஸாவில் அமைதி திட்டத்தை ஹமாஸ் நடைமுறைப்படுத்திய உடனே காஸாவில் போர் நிறுத்தம் அமுலுக்கு வரும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்தார்.
மேலும், அமைதிப் பேச்சுவார்த்தைக்காக, காஸாவில் தற்காலிகமாக தாக்குதலை நிறுத்துவதாக இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு அறிவித்துள்ளார்.
சமூக வலைதளத்தில் ட்ரம்ப் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
காஸாவின் ஒருசில பகுதிகளில் இருந்து படைகளை திரும்பப் பெற இஸ்ரேல் ஒப்புக்கொண்டுள்ளது. இந்த தகவலை ஹமாஸ் அமைப்பினரிடம் நாங்கள் தெரிவித்துவிட்டோம்.
காஸா அமைதி திட்டத்தை ஹமாஸ் நடைமுறைப்படுத்திய உடனே காஸாவில் போர் நிறுத்தம் அமுலுக்கு வரும். பணயக்கைதிகள் விடுவிக்கப்படுவார்கள். மேலும் அடுத்த கட்ட நடவடிக்கையை நாங்கள் செய்து வருகிறோம். இவ்வாறு ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.




