நீதிமன்றில் நாளை ரணில் ஆஜராக மாட்டார்.

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் நாளை ஆஜர்படுத்த வேண்டியுள்ள நிலையில், அவர் நீதிமன்றத்தில் ஆஜராவதை அவரது உடல்நிலை தடுப்பதாக வைத்தியசாலை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மருந்துகளை உள்ளெடுக்குமாறும், அடுத்த மூன்று நாள்களுக்கு ஓய்வெடுக்குமாறு விக்ரமசிங்கவுக்கு ஆலோசனையளிக்கப்பட்டுள்ளதாக கொழும்பு தேசிய வைத்தியசலையின் சிரேஷ்ட அதிகாரியொருவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.




