ரணிலை சந்தித்தார் பிரதமர் ஹரிணி.

கொழும்பு தேசிய வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்றும் சென்று பார்வையிட்டார்.
இந்நிலையில், பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, திருமதி மைத்ரி விக்கிரமசிங்கவுடன் இணைந்து முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை வைத்தியசாலையில், நேற்று ஞாயிற்றுக்கிழமை சென்று பார்வையிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இந்த செய்தி சமூக வலைத்தளங்களிலும் பரவி வரும் நிலையில். இந்த செய்தி போலியானது என பிரதமர் காரியாலயம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.




