2026 August 16, Sunday ⛅ கொழும்பு 27° ☀️ யாழ்ப்பாணம் 29° ⛅ கண்டி 26° ⛅ மட்டக்களப்பு 30°
LIVE
கடுவெல வழியாக பயணிப்போருக்கு பொலிஸாரின் முக்கிய அறிவிப்பு!28 ஆண்டுகால சாதனையை முறியடித்த ஜேர்மனியின் ஜூலியன் வெபர்!நாட்டின் பல பகுதிகளில் இன்று பல தடவைகள் மழைக்கு வாய்ப்பு!எல்ல சுற்றுலாத்துறைக்கு ரூ.1,000 மில்லியனுக்கும் அதிகமான அபிவிருத்தித் திட்டங்கள்!அம்பாறை மீனவர்களின் பிரச்சினைகளுக்கு விரைவான தீர்வு!ஜனாதிபதியுடனான கலந்துரையாடலின் முழு வீடியோவை கோரும் சட்டத்தரணிகள் சங்கம்!சிறைச்சாலை அதிகாரிகளுக்கு ஆபத்தை ஏற்படுத்த திட்டமா? அதிர்ச்சித் தகவல்!திருகோணமலையில் திறமையான மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை!

தெஹிவளையில் போதைப்பொருளுடன் பெண்ணொருவர் கைது.

உள்ளூர்August 17, 2025 · 12 months முன்2
தெஹிவளையில் போதைப்பொருளுடன் பெண்ணொருவர் கைது.

தெஹிவளையில் 5இலட்சம் ரூபாவுக்கும் அதிக மதிப்புள்ள 5,000க்கும் மேற்பட்ட போதை மாத்திரைகளுடன் 31 வயது பெண் ஒருவர் கைது செய்யப்பட்டதாக கல்கிசை குற்றப் புலனாய்வுப் பிரிவு தெரிவித்துள்ளது.

குறித்தசந்தேக நபர், போதை மாத்திரைகளை விற்பனை செய்ததாக வந்த புகாரைத் தொடர்ந்து. அவரது வீட்டை சோதனைக்குட்படுத்திய போது அலுமாரிக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஹெரோயின் போதை மாத்திரைகளைமீட்டதோடு குறித்த சந்தேக நபரையும் கைது செய்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

சோதனையின் போது சட்டவிரோத போதைப்பொருள் வர்த்தகத்தில் இருந்து சம்பாதித்ததாக நம்பப்படும் ரூ.134,000ரூபா பணமும் பறிமுதல் செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்த்துள்ளனர்.

அத்தோடு, சந்தேகநபரான அந்த பெண்ணை கல்கிசை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.