போலி நாணயத்தாள்கள் பரவல் – பொலிஸார் எச்சரிக்கை !

நாட்டில் போலி நாணயத்தாள்கள் பொதுமக்களிடையே பரவலாகப் பரவி வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவ் வருடத்தில் இதுவரை 407 ஐந்தாயிரம் ரூபாய் போலி நாணயத்தாள்களை குற்றப் புலனாய்வுத்திணைக்களத்தினர் கைப்பற்றியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், உதவி பொலிஸ் அத்தியட்சகர் எப்.யு. வுட்லர் தெரிவித்துள்ளார்.




