போராட்டம் தீவிரமாகும் – CEB எச்சரிக்கை.

இலங்கை மின்சார சபையின் தொழிற்சங்கங்கள், தங்கள் போராட்டத்தின் மூன்றாவது கட்டத்தை ஞாயிற்றுக்கிழமை 21ஆம் திகதி நள்ளிரவில் ஆரம்பிக்கவுள்ளதாக தொழில்நுட்ப வல்லுநர்கள் சங்கத் தலைவர் கோசல அபேசிங்க தெரிவித்துள்ளார்.
போராட்டம் 24ஆம் திகதி வரை தொடரும், அதன் பின்னர் நிலைமையைப் பொருத்து எதிர்வரும் நடவடிக்கைகள் குறித்து தீர்மானிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.




