2026 August 15, Saturday 🌧️ கொழும்பு 28° ⛅ யாழ்ப்பாணம் 30° 🌧️ கண்டி 26° 🌧️ மட்டக்களப்பு 31°
LIVE
அம்பாறை மீனவர்களின் பிரச்சினைகளுக்கு விரைவான தீர்வு!ஜனாதிபதியுடனான கலந்துரையாடலின் முழு வீடியோவை கோரும் சட்டத்தரணிகள் சங்கம்!சிறைச்சாலை அதிகாரிகளுக்கு ஆபத்தை ஏற்படுத்த திட்டமா? அதிர்ச்சித் தகவல்!திருகோணமலையில் திறமையான மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை!இந்தியாவுக்குச் சொந்தமானதா? இரணைவில கடற்கரையில் மர்ம படகு!Google Maps-ல் புதிய AI வழிகாட்டி – பயணம் இனி இன்னும் எளிது!தினசரி உடற்பயிற்சி – ஆரோக்கியமான நீண்ட ஆயுளுக்கு முதல் படி!சருமம் முதல் கூந்தல் வரை – ஓமம் தண்ணீரின் அழகு ரகசியங்கள்!

பல்நோக்கு போக்குவரத்து மத்திய நிலையங்களை ஸ்தாபிக்க அமைச்சரவை அனுமதி

உள்ளூர்November 11, 2025 · 9 months முன்2
பல்நோக்கு போக்குவரத்து மத்திய நிலையங்களை ஸ்தாபிக்க அமைச்சரவை அனுமதி

நாடு முழுவதும் பல்நோக்கு போக்குவரத்து மத்திய நிலையங்களை ஸ்தாபிப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

நாட்டின் பொது போக்குவரத்தினை செயற்திறன்மிக்க துறையாக மாற்றியமைப்பது அரசாங்கத்தின் கொள்கையாகும்.

Transit cities இடங்களிலிருந்து பிரதான நகரங்களுக்கு செயற்திறன் மிகு போக்குவரத்து சேவையை ஆரம்பிக்கும் வகையில் தேவையான வசதிகளுடன் கூடிய பல்நொக்கு போக்குவரத்து மத்திய நிலையங்களை ஸ்தாபிப்பதற்கான தேவை அடையாளம் காணப்பட்டுள்ளது.

அத்துடன் பஸ், ரயில், வாடகை வாகன சேவை போன்ற போக்குவரத்து ஊடக ஒருங்கிணைப்பை மேம்படுத்தும் நோக்கில் அதிக பயணிகளின் பயன்பாட்டிற்கு உட்பட்டுள்ள பஸ் தரிப்பிடங்கள் மற்றும் ரயில் நிலையங்களை ஒன்றிணைத்து ஆய்வொன்றை மேற்கொள்ளவும் முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளது.

இதற்கமைய கண்டி, அனுராதபுரம், கோட்டை ரயில் நிலையம், மொரட்டுவை, ராகமை, அவிஸ்ஸவாளை, கம்பஹா, கட்டுநாயக்கா, களுத்துறை, காங்கேசன்துறை உள்ளிட்ட இடங்களில் இந்த பல்நோக்கு போக்குவரத்து மத்திய நிலையங்களை அமைப்பது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.