சுவிற்சர்லாந்து தூதுவர் ரில்வின் சில்வாவுடன் கலந்துரையாடல்

மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வாவை சுவிற்சர்லாந்து தூதுவர் சிறி வோல்ட் சந்தித்துப் கலந்துரையாடியுள்ளார்.
பத்தரமுல்ல, பெலவத்தையில் உள்ள மக்கள் விடுதலை முன்னணியின் தலைமையகத்தில் வைத்த இந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளதாக தெரியவருகின்றது.
அண்மையில் இலங்கை நாடாளுமன்றக் குழுவொன்று சுவிற்சர்லாந்துக்கு மேற்கொண்ட பயணம் தொடர்பாகவும் இந்தச் சந்திப்பின்போது கலந்துரையாடப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.
இந்தச் சந்திப்பில் கொழும்பிலுள்ள சுவிஸ் தூதரக முதல் நிலைச் செயலர் ஜஸ்டின் பொய்லெட்டும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.




