2026 August 16, Sunday ⛅ கொழும்பு 26° ⛅ யாழ்ப்பாணம் 28° ⛅ கண்டி 22° ⛅ மட்டக்களப்பு 26°
LIVE
எல்ல சுற்றுலாத்துறைக்கு ரூ.1,000 மில்லியனுக்கும் அதிகமான அபிவிருத்தித் திட்டங்கள்!அம்பாறை மீனவர்களின் பிரச்சினைகளுக்கு விரைவான தீர்வு!ஜனாதிபதியுடனான கலந்துரையாடலின் முழு வீடியோவை கோரும் சட்டத்தரணிகள் சங்கம்!சிறைச்சாலை அதிகாரிகளுக்கு ஆபத்தை ஏற்படுத்த திட்டமா? அதிர்ச்சித் தகவல்!திருகோணமலையில் திறமையான மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை!இந்தியாவுக்குச் சொந்தமானதா? இரணைவில கடற்கரையில் மர்ம படகு!Google Maps-ல் புதிய AI வழிகாட்டி – பயணம் இனி இன்னும் எளிது!தினசரி உடற்பயிற்சி – ஆரோக்கியமான நீண்ட ஆயுளுக்கு முதல் படி!

சுற்றுலா செல்பி குறித்து பொலிஸார் எச்சரிக்கை

உள்ளூர்November 11, 2025 · 9 months முன்0
சுற்றுலா செல்பி குறித்து பொலிஸார் எச்சரிக்கை

சுற்றுலா, யாத்திரை உள்ளிட்ட பயணங்களின் போது தாம் இருக்கும் இடத்தை தெரிவிக்கும் வகையில் புகைப்படங்களை எடுத்து சமூக ஊடகங்களில் பதிவிடுவதை தவிர்க்குமாறு பொலிஸார் பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளனர்.

தம்மை பின்தொடரும் கொள்ளையர்கள் இதனை சாதகமாக பயன்படுத்திக் கொண்டு வீடு, சொத்துக்களை கொள்ளையிடும் சந்தர்ப்பங்கள் அதிகமென உதவி பொலிஸ் அத்தியட்சகர் எப்.யூ.வுட்லர் தெரிவித்துள்ளார்.

கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபடுவோர் இது போன்ற சந்தர்ப்பங்கள் குறித்து அவதானத்துடன் இருப்பதுடன், புகைப்படங்கள் ஊடாக அவர்களுக்கு போதுமான தகவல்கள் கிடைக்கப்பெறுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன் சுற்றுலாப் பயணங்களின் போது பயன்படுத்தப்படும் வாகனங்கள், வாகன சாரதிகள் தொடர்பிலும் உரிய அவதானத்துடன் இருக்குமாறு பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.