புறக்கோட்டையில் உயிருள்ள தோட்டாக்கள் மீட்பு.

கொழும்பு – புறக்கோட்டை பகுதியில் உணவக கழிப்பறை குப்பைத் தொட்டியில் இருந்து 9MM வகை 17 தோட்டாக்கள் மீட்க்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உணவக கழிப்பறையை சுத்தம் செய்யும் போது குப்பைத் தொட்டியில் குறித்த தோட்டகள் இருப்பதை துப்புரவு ஊழியர்கள் கவனித்து பாதுகாப்பு அதிகாரிகளுக்கு தகவல் அளித்துள்ளனர். பின்னர் அவர்கள் தொலைபேசியில் பொலிஸாருக்கு தகவல் அளித்து, அதை தங்கள் கட்டுப்பாட்டில் எடுத்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும், இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுக்க குழுவொன்று நியமிக்கப்பட்டு விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.




