செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வு மீண்டும் ஆரம்பம்.

யாழ் – செம்மணி சித்துபாத்தி இந்து மயான மனிதப் புதைகுழியின் இரண்டாம் கட்ட அகழ்வு பணிகள் 33வது நாளாக நேற்று (25) யாழ்ப்பாண நீதவான் நீதிமன்ற நீதிபதி ஏ.ஏ.ஆனந்தராஜாவின் முன்னிலையில் ஆரம்பிக்கப்பட்டது.
இதன் அடிப்படையில் இதுவரை யாழ் – செம்மணி மனிதப் புதைக் குழியிலிருந்து 150 மனித எலும்புக்கூடுகள் முழுமையாக அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.





