மின்சாரக் கட்டணம் அதிகரிக்குமா ?

இலங்கை மின்சார சபையினால் முன்வைக்கப்பட்ட மின்சாரக் கட்டணத்தை 6.8 சதவீதத்தால் உயர்த்துவது தொடர்பான முன்மொழிவு குறித்து, பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் முடிவு இந்த மாதம் 15 ஆம் திகதி அல்லது அதற்கு முன்னதாக வெளியிடப்படும் என்று பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
இந்த மாதம் 8 ஆம் திகதி மேல் மாகாண ஆலோசனையின் இறுதி அமர்வு நடைபெற்ற பின்னர், கட்டணங்களைத் திருத்துவது குறித்த இறுதி முடிவு எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.




