நேபாளத்தில் 26 சமூக வலைதளங்களுக்கு தடை

சுமார் 26 சமூக வலைதளங்களுக்கு நேபாளம் நாட்டில் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதன்படி நேற்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் குறித்த தடை விதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதனடிப்படையில், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், யூடியூப், எக்ஸ் தளங்கள் உள்ளிட்டவைக்கு அந்நாட்டு அரசாங்கம் தடை விதித்துள்ளது.
நேபாள அரசின் விதிமுறைகளுக்கு உட்படாத சமூக வலைதளங்களுக்கே தடை விதிக்கப்பட்டுள்ளதாகக் தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.




