ICC விருது வென்ற அபிஷேக் சர்மா – ஸ்மிருதி மந்தனா.

கிரிக்கெட் உலகில் ஒவ்வொரு மாதமும் சிறப்பாக செயற்படும் வீரர், வீராங்கனைகளை கௌரவிக்கும் விதமாக ICC சார்பில் விருது வழங்கப்பட்டு வருகின்றது.
இந்நிலையில்,செப்டம்பர் மாதத்துக்கான சிறந்த வீரர், வீராங்கனைக்கான விருதினை அபிஷேக் சர்மா மற்றும் ஸ்மிருதி மந்தனா வென்றுள்ளனர்.
அவ் வகையில், செப்டம்பர் மாதத்துக்கான சிறந்த வீரர் விருதினை இந்திய அணியின் அதிரடி நாயகனான அபிஷேக் சர்மா மற்றும் இந்திய மகளிர் அணியின் நட்சத்திர துடுப்பாட்ட வீராங்கனையான ஸ்மிருதி மந்தனா வென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.




