சம்பத் மனம்பேரிக்கு உதவிய CEB ஊழியர் கைது !

மித்தெனியாவில் ‘ஐஸ்’ என்ற போதைப்பொருள் தயாரிக்க பயன்படுத்தப்படும் இரசாயனங்கள் நிரப்பப்பட்ட ஒரு புதைக்கப்பட்ட கொள்கலன் கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து, சம்பத் மனம்பேரி என அடையாளம் காணப்பட்ட சந்தேக நபர் தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நிலையில்,
அவருக்கு தங்குமிடம் வழங்கியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டில் இலங்கை மின்சார சபையின் (CEB) ஊழியர் ஒருவர் பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பணியகத்தால் (PNB) கைது செய்யப்பட்டுள்ளார்.




