2026 August 15, Saturday 🌧️ கொழும்பு 29° ⛅ யாழ்ப்பாணம் 30° 🌧️ கண்டி 26° 🌧️ மட்டக்களப்பு 34°
LIVE
திருகோணமலையில் திறமையான மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை!இந்தியாவுக்குச் சொந்தமானதா? இரணைவில கடற்கரையில் மர்ம படகு!Google Maps-ல் புதிய AI வழிகாட்டி – பயணம் இனி இன்னும் எளிது!தினசரி உடற்பயிற்சி – ஆரோக்கியமான நீண்ட ஆயுளுக்கு முதல் படி!சருமம் முதல் கூந்தல் வரை – ஓமம் தண்ணீரின் அழகு ரகசியங்கள்!தினசரி புரதத் தேவையை பூர்த்தி செய்ய உதவும் சிறந்த உணவுகள்!பேருந்து நிறுத்தங்களில் வாகனங்களை நிறுத்தினால் கடும் சட்ட நடவடிக்கை!நாணய சுழற்சி இந்தியா வசம் – முதலில் துடுப்பாட்டத்தை தேர்வு செய்தது!

மத்திய கிழக்கில் பதற்றம் தீவிரம்; குவைத் விமான நிலையம் குறிவைப்பு.

உலகம்June 3, 2026 · 2 months முன்1

குவைத் சர்வதேச வானூர்தி நிலையத்தின் முதலாவது முனையம் மீது ஈரான் நடத்திய ஏவுகணை மற்றும் ஆளில்லா வானூர்தி தாக்குதல்களை அடுத்து, அங்கிருந்த வானூர்தி போக்குவரத்து சேவைகள் இடைநிறுத்தப்பட்டு, வானூர்திகள் அருகில் உள்ள வானூர்தி நிலையங்களுக்குத் திசைதிருப்பப்பட்டுள்ளன.

இந்தத் தாக்குதலில் உயிரிழப்புகள் மற்றும் காயங்கள் ஏற்பட்டுள்ளதுடன், பல சொத்துக்களும் சேதமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

தாக்குதலைத் தொடர்ந்து குவைத், சிவில் வானூர்தி போக்குவரத்து அதிகார சபை அவசரக்கால திட்டத்தைச் செயற்படுத்தியுள்ளது.

பயணிகள் மற்றும் ஊழியர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும், வானூர்தி நிலையப் பணிகளை மீண்டும் வழமைக்குக் கொண்டு வரவும் பாதுகாப்பு மற்றும் தொழில்நுட்ப நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக அதன் ஊடகப் பேச்சாளர் அப்துல்லா அல்-ரஜ்கி தெரிவித்துள்ளார்.

தற்போது சேத விபரங்கள் மதிப்பீடு செய்யப்பட்டு வருவதுடன், அதன் பின்னரே புனரமைப்புப் பணிகள் ஆரம்பிக்கப்படவுள்ளன.